Sunday, June 19, 2011

காத்திருக்கிறேன்..

விடியாத காலை
பனிசிந்தும் வேளை..
காத்திருந்தேன் ரயில் நிலையத்தில் - என்
பயண ரயிலின் பச்சைகொடிக்காக ..

மெல்லிய ஆடை கொண்டு - தன்

மல்லிகை முகத்தை மூடி ..
கனவு தேவதை வந்தால்
கனவு உனக்கு தேவையா என்பதுபோல் .. - அவளது அழகால்

என் கண்ணோரம் இருந்த தூக்கம்

மண்ணோரம் மறைந்துக்கொள்ள - அந்த
பெண்ணோரம் பார்வை திரும்பியது
என்னோரம் திரும்புமா என்று ?! - அவளது அழகால்

எனக்குள் இருந்த ஏக்கம் - தன்

ஜன்னல் கதவை மூடி
வாசற்கதவை திறந்தது ..

அங்கே ஒலித்தது ரயிலின் மணியோசை

எனது பயணத்தின் துவக்கத்திற்கும்
அவளது சந்திப்பின் முடிவுக்குமாய் ..!

... காத்திருத்தல் தொடரும்

No comments:

Post a Comment