Monday, June 20, 2011

புத்தாண்டு பிறக்க வேண்டும் (2011)

புத்தாண்டு பிறக்க வேண்டும்
பூமியிலே முத்தான ஒரு
புத்தாண்டு பிறக்க வேண்டும் ..

ஏர்கொண்டு உழுபவன்
ஏற்றங்கள் பெற வேண்டும் ..
போர்கண்ட இவ்வுலகில்
மாற்றங்கள் வர வேண்டும்..

பஞ்சம் பசியென்ற
பேசுக்கள் அழிந்து ..
பிஞ்சு குழந்தைபோல
நெஞ்சம் குளிர வேண்டும் ..

சந்தனப் பூங்காற்று ..
செந்தமிழ் தமிழ் பேச்சு ..
வந்தாரை வாழ வைக்கும்
இந்த நாடெங்கும் வீச வேண்டும் ..

பண்டிகை காலங்களில்
தண்டனை தரும்படி
குறுந்தகவலுக்கு வசூலிக்கும்
நிலை இனிமேலாவது மாறுமோ ..?!

கன்னியவள் கடைகண்ணில்
மண்ணில் இந்த ஆண்கள்லாம் ..
சிறைபட்டு தவிக்கும் நிலை
மாறிதான் போகுமோ ?!

திட்டம்போட்டு திருடும் - இந்த
மட்டமான அரசியல்வாதியின்
கொட்டமெலாம் அடைகிவைக்க
சட்டம்தான் ஏதேனும் வந்திடுமோ ?!

வேலையிலா திண்டாட்டம் என்று
சாலையினில் சுற்றித்திரியும் எங்கள்
பட்டதாரி இளைன்கர்கலேலாம் - கொஞ்சம்
பகுத்தறிவும் பெறவேண்டும் ..!

முதியோர் இல்லமென்று - பெற்றோரை
ஒதிகிவைகும் இளைங்கர்களே ..
கொஞ்சம் யோசித்துப்பார் - உன்னை
ஏற்றிவிட ஏணி எதுவென்று ..!!

அத்தனைக்கும் ஆசைப்படவில்லை ..!
நானும் கொஞ்சம் ஆசைபடுகிறேன் ..!!
இந்த இனிய புத்தாண்டில்
இவையாவும் நிறைவேறும் என்று ..

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ..

No comments:

Post a Comment