Tuesday, January 3, 2012

தானே புயல் !

புத்தாண்டு துவக்கத்தில்
புயலொன்று கரைகடந்தது.. !

இந்த புயல் தானே வந்ததால் என்னவோ
இதன் பெயரும் கூட - தானே !

ஓங்கி வளர்ந்த மரங்களை எல்லாம்
ஓரங்கட்டி போட்டுவிட்டது ..!

விளைந்த நிலங்களை எல்லாம்
வெற்று நிலமாய் மாற்றிவிட்டது ..!

மின்கம்பங்களை எல்லாம்
காய்ந்த விறகாய் ஒடித்துவிட்டது..!

கூரை வீடுகளை எல்லாம்
கூளமாய் அலங்கோலப்படுத்தியது..!

இயற்கையின்  விளையாட்டில்
இதுவும் ஒன்றா.. ?

மரங்களை அழித்து போதும் - என்
மனிதர்களை விட்டுவை ..!

அங்கே !
இன்னலில் வாடும் இதயங்களுக்கு
இது சமர்ப்பணம்!

Saturday, October 22, 2011

Bhagavat Gita by Sugi sivam

ஒரு பசுவின் மடியின் நான்கு காம்புகள் வழியாக பால் கறக்கப் படுவதை போல
பகவத்கிதையின் நான்கு வேந்தன்கள் (Rig, Yajur, Sama, Atharva) மூலமாக ஞானம் கறக்க பட்டது என்று கூறுவர்.