Thursday, May 26, 2011

ஊடல்

பூவே



உன் பொன் விழியில்

புயல் ஒன்றை காண்கிறேன்..

கொஞ்சம் புன்னகை செய்யடி - ராட்சசி ..



உன் மெளனத்தின் வாசலிலே

எனை கட்டிபோட்டுவிட்டு ..

வன்முறைகள் செய்கிறாயே - ஏனடி..



உன் கொலுசின் ஓசையினை

கேட்கவே
ஏங்கும்
என் இதயத்தை

விரதம் இருக்க செய்கிறாயே - போடி ..



உன் பிஞ்சு விரலின்

இஞ்சி இடுக்கில் நுழைந்திருக்கும்

என் விரல்களை கெஞ்ச வைக்கிறாயே - சதிகாரி



உன்
கன்னத்தில்
முத்தமிடும்

என் உதடுகள் இப்பொது

பாலைவனமாய் மாறி கிடப்பதை பாரடி - சினேகிதியே ...

1 comment: