Friday, July 1, 2011

காதல் ஒரு சகாப்தம் !!

காதல்,
கண்களில் துவங்கி
கனவுகளில் பயணம் செய்து
இதயத்தில் ஊற்றெடுத்து
இறுதிவரை செல்வதன்றோ ?!

இல்லை,

கன்னக் குழிகளில்
சின்ன இதயத்தை பறிகொடுத்து
எண்ணக் கதவுகளில்
ஏக்கங்களோடு காத்திருப்பதன்றோ ?!

இருந்தும்,

விண்ணின்ற மேகத்தைக்கொண்டு
எண்ணற்ற கவிதைகளை எழுதி
தன்னின்ற காதலை சொல்ல
தயங்கியே நிர்ப்பதன்றோ ?!

அன்பில்,

பின்னிய கைகளோடு
மின்னிடும் மணல்பரப்பில்
தன்னை மறந்து நடந்து
பயணங்கள் செய்வதன்றோ ?!

உண்மையில்,

உள்ளத்தில் எழுந்த காதலை
உறுதியோடு தனைச்சொல்லி
வெள்ளமென வந்த தடைகளை
வெற்றிகொண்டு வேரறுப்பது தான் காதல் !!

என்றும்,

காட்சிப்பிழை தன்னில்
கண்டதையும் காதலிக்காமல்
மண்ணில் வாழும்வரை
உலராத மலர்தான் காதல் !!

தண்ணீர் மலையினில் துவங்கி

ஆறுகளில் ஆர்ப்பரித்து
முழுதாய் கடலில் கலப்பது போல்
முழுதாய் ஓர் இதயத்துடன் கலப்பது தான் காதல் !!

வண்ணத்தில் வேறுபட்டாலும்

எண்ணத்தில் ஒன்றிணைக்கும் மாலையாய்
இணைந்த கைகளோடு
இறுதிவரை நிலைப்பது தான் காதல் !!

மண்ணில்,

ஜாதி, மதம்
மொழி, இனம் இவற்றை கடந்து
சரித்திரம் பல படைப்பதால் - என்றும்
காதல் ஒரு சகாப்தம் !!

No comments:

Post a Comment